Wednesday, September 8, 2010

அழகு மிகு சென்னை

அழகு மிகு சென்னை

இது மண்ணின் பெருமை உரம்
அகற்றப் படக் கூடிய வெளிக் குப்பை
அழுக்கு என்பது என்ன? வெகு நாள் அடங்கிய
தூசியா.


அழுக்கு வீட்டிற்குள் வரக் காரணிகள் என்ன.
வெளியிலிருந்து வரும் மாசு.

உள்ளிருந்தே மறைந்து வாழும் தூசு.

சென்னையே அழுக்கு நகரம் என்று சமீபத்தில்
விமரிசிக்கப் பட்டதைப் பார்த்தேன்.

நமக்கும் தெரியும்.

சென்னை எப்படி இருந்தது.
அது இந்த 50 வருடங்களில் எப்படி மாறியிருக்கிறது.

எத்தனை வறுமை சூழ்நிலையில்

உழவர்கள் தங்கள் நில புலன்களை
விற்றுவிட்டு சென்னையை அடைக்கலம்

அடைந்தார்கள்..
விளைநிலங்கள் சிறுத்து வீடுகள் பெருத்து,
தண்ணீர் வளம் சுரண்டப்பட்டு,

மலைகளே கரைந்து,பெரிய நகரங்கள்
உருவாகி இன்னும் எத்தனையோ


கணக்கிலடங்காத வினைகள் நடந்தே
இந்த நிலைமைக்கு நம் நகரம் வந்திருக்கிறது.



சிங்காரச் சென்னை உருவாவதற்கு
முயற்சிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

சிங்காரமாக இல்லாவிட்டாலும் சுத்தமாக இருக்க

நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய
வேலைகள் எத்தனையோ.

பொதுவில் குற்றத்தைச் சுமத்துவதை விட,

நம் முதுகு சுத்தமாக இருக்கிறதா
என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

நம்வீட்டுக்குப்பைகள் ஒழுங்காக
அதற்கு உண்டான குப்பைத் தொட்டியை அடைகிறதா,

இல்லை அதற்கு வெளியே விட்டெறியப் படுகிறதா.

இதைக் கட்டாயம் கண்டு கொள்ளலாம்.

இதெல்லாம் செய்யக் கூடியவை.

இப்பொழுது வீட்டிற்கு முன்னால்
நீண்ட பள்ளம் வெட்டி கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது.

ஏதோ கேபிள் போடுகிறார்களாம்.



எப்பொழுது முடிக்கப் போகிறீர்கள்
என்று (இந்தப் பள்ளங்களால் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளயே முடங்கிய)

ஒரு பெண்மணி )) பணிசெய்பவர்களிடம் செய்த வாக்குவாதத்துக்கு நடுவில் மயங்கியே விழுந்து விட்டார்.

அவ்வளவு மன அழுத்தம் அவருக்கு.
சர்க்கரை இருப்பதால் நடைபயிற்சி செய்தே ஆக வேண்டிய கட்டாயம் அவருக்கு.

அது செய்ய முடியாமல் சர்க்கரை அதிகமாகி,ரத்த அழுத்தமும் அதிகரிக்க இது நடந்துவிட்டது.

நம்ப முடிகிறதா.

அவசர சிகித்சை அளித்து இப்பொழுது
இன்னும் இரண்டு வாரங்களில் அவரால் வீடு வர முடியுமாம்.

இதெல்லாம் எனக்கு எங்கள்
வீட்டில் வேலை செய்யும் பெண்

அளித்த செய்தி.

நகரின் நல்ல பகுதி என்று அழைக்கப் படும்
மைலப்பூரிலேயே இந்த கதி.

இன்னும் இப்பொழுது அடாது பெய்து வரும் மழையினால்

பாதிக்கப் பட்ட ஒரு இடத்துக்குப் போக
எண்ணினோம். எங்களுக்கு

மிகவும் வேண்டியவர் ஒருவரின்
உடல்நலம் விசாரிக்கத்தான் அங்கு

போய் வர நினைத்தோம்.

அவர்களிடமிருந்து வந்த அவசர செய்தி,
எங்க வீட்டைச் சுற்றி

தண்ணீர் நிற்கிறது. வெய்யில் வந்த பிறகு
வாருங்கள் என்ற செய்திதான் அது.

யாரைக் குற்றம் சொல்லி என்ன நடக்கப் போகிறது.

மனச்சுமை தான் அதிகரிக்கும்.

இவ்வளவு நடந்தாலும் இது நம் சென்னை. நம் மெட்ராஸ். இங்கிருப்பவர்கள் நம் மக்கள்.

அனைவரும் அவரவர் அளவில்
சுத்தமாக இருக்கத்தான் நினைக்கிறார்கள்.

மீண்டு வருவோம். ஆனால் அசுத்தத்தைக்
கூடச் சுத்தம் செய்துவிடலாம். உடலால்,சொல்லால்

ஒன்றுமே செய்யாமல் மனதில் நம் ஊரின் அழுக்கை வர்ணித்து
நம்மை'' ஓ டர்ட்டி சென்னை'' என்கிறார்களே

அவர்கள் முதலில் தங்கள் எண்ணங்களைச்
சுத்தம் செய்து கொள்ளட்டும்.

மற்றவற்றை நம் சென்னைவாசிகள் பார்த்துக் கொள்வார்கள்.

சென்னையின் சுத்தம் வளரட்டும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

No comments:

Post a Comment