Saturday, June 16, 2012

Tamil Kavithaigal 2012






















































By
Yours
Romeo

கூடங்குளம் தென் தமிழகத்தின் அடிவயிற்றில் பதித்திருக்கும் அணுகுண்டு! - அரிமாவளவன் கண்டனம்


கூடங்குளம் தென் தமிழகத்தின் அடிவயிற்றில் பதித்திருக்கும் அணுகுண்டு! - அரிமாவளவன் கண்டனம்



இடிந்தகரை
கடலோரக் கிராமம் இடிந்தகரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடங்குளம் அணுஉலையை எதிர்த்துத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடுவில் உரையாற்றிய தமிழர்களப் பொதுச்செயலாளர் அரிமாவளவன் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கடுமையாகக் கண்டித்து உரையாற்றினார்.
“இன்று காலை இந்தப் போராட்டத்திற்குப் பல்லாயிரம் மக்களோடு மக்களாக பங்கேற்க நான் வந்து கொண்டிருந்தபோது, இந்த மக்கள் எழுச்சியை எப்படியாவது முறியடிக்கவேண்டும் என்ற முனைப்போடு அரசும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் குறுக்கு வழிகளை நாடுகின்றனர் என அறிய வந்தேன். இராதபுரம் வட்டாட்சியர், “போராட்டம் நடத்தினால், கூடங்குளம் இடிந்தகரை ஊர்களுக்கு மின்சாரத்தையும் தண்ணீரையும் வெட்டுவேன்” என்று அச்சுறுத்தியிருகிறார். சனநாயக மரபுகளுக்கு இவரைப் போன்ற சர்வாதிகார அதிகாரிகள் வெளிப்படையாக விட்டிருக்கிற சவால் இது. மக்களுடைய வரிப்பணத்திலே வாழ்கின்ற இவர்கள் மக்களுடைய அடிப்படை உரிமைகளை எடுத்துவிடுவேன் என்று ஆணவத்தோடு சொல்லியிருக்கிறார். இன்று மாலை 6 மணிக்குள் இராதாபுரம் வட்டாட்சியர் அவர்கள் இது குறித்த தன்னிலை விளக்கமோ, மன்னிப்போ கோராவிட்டால் அவருடைய பணி நீக்கத்திற்காக தமிழர்களம் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரிக்கிறேன்.
கூடங்குளத்தில் வருவது அணுமின் நிலையமல்ல. 14 ஆயிரம் கோடிகளை விழுங்கிவிட்டு அங்கே நிற்பது நம்மைக் கொல்லத் துடிக்கும் அணுகுண்டு. சப்பான நகரங்களான் ஹிரோசிமா நாகசாகியில் வெடித்தது போன்று 300 மடங்கு சக்தி வாய்ந்த அணுஉலை அது. அது வெடித்தால் தென் தமிழகம் கருகிப்போய்விடும் என்பதுதான் உண்மை.
பாதுகாப்பானது என்று மன்மோகன் சிங் சொல்கிறார். நாட்டின் தலைநகராம் தில்லிக்குப் பல அடுக்குப் பாதுகாப்பு உண்டு. அதிலும் அதி உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் பாராளுமன்றம் நிற்கிறது. தில்லி உயர் நீதி மன்றம் நிற்கிறது. ஆனால், தாக்கநினைத்தவர்கள் மிக எளிதாக வந்து பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போதே அதைத் தாக்கிச் சென்றார்கள். எங்கே போனது உங்கள் பாதுகாப்பு? அண்மையில் தில்லி உயர் நீதி மன்றத்தைத் தாக்கினார்கள். எங்கே போனது உங்கள் பாதுகாப்பு? பம்பாய் நகரம் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்கிச் சிதைக்கப்பட்டபோது எங்கே போனது உங்கள் பாதுகாப்பு? நீங்கள் வாழ்கிற, நேசிக்கிற வடநாட்டையே உங்களால் பாதுகாக்க முடியவில்லையே! நீங்கள் வெறுத்து ஒதுக்குகிற தமிழகத்தையும் தமிழர்களையுமா நீங்கள் சிரத்தையோடு பாதுகாப்பீர்கள்?
எங்கள் தமிழ்ச் சொந்தங்கள் இதே கடற்கரைகளில் 550 பேர் சிங்களக் காடையர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உங்களது கப்பற்படை ஏனென்று கேட்டதா? எங்கள் ஈழத்துச் சொந்தங்கள் ஒன்றரை லட்சம் பேரை அண்மையில் கொன்று குவிக்கத் துணை போனீர்களே! உங்களிடமா எங்கள் பாதுகாப்பைக் கொடுக்கச் சொல்கிறீர்கள்? அறுக்கத் துடிக்கிற கசாப்புக்கடைகாரன் ஆடுகளைப் பார்த்து சீவாருணியம் பேசிய கதையாக இருக்கிறது, சோனியா அரசின் தமிழர் பாதுகாப்பு ஏற்பாடுகள்! உங்களை நாங்கள் நம்பத் தயாராக இல்லை.
பல ஆண்டுகளுக்குத் தேவையான யுரேனியத்தை கூடங்குளத்தில் நீங்கள் சேர்த்து வைத்திருப்பது அணுமின்னுக்காக அல்ல! அதன் கழிவுகளிலிருந்து அணுகுண்டுகள் தயாரிக்கத்தான் என்பது ஊரறிந்த உண்மை. எப்படி மகிந்த ராசபக்ச என்ற கொடுங்கோலன் எங்கள் தமிழனத்தைக் கருவறுக்க துடிக்கிறானோ அதுபோன்றே தென் தமிழ்நாட்டுத் தமிழர்களை அழித்தொழிக்க கூடங்குளத்தையும் வடதமிழ்நாட்டைச் சுடுகாடாக்க கல்பாக்கத்தையும் வைத்திருக்கிறீர்கள். கல்பாக்கத்தில் இப்போதும் சாவுகள் நடக்கின்றன. ஆனால் அதை மக்களிடமிருந்து மறைக்கிறீர்கள்! தடுக்கிறீர்களா? தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் இன்னும் பிணங்கள் விழுகின்றன! தடுத்து எங்களைக் காத்துவிட்டீர்களா? ஆகவேதான் அடித்துச் சொல்கிற«£ம். “எங்களுக்கு இந்த இழவுத் தொழிற்சாலை வேண்டாம்” என்று.
பல்லாயிரம் கோடிகளை முடக்கிவிட்டோம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் முடக்கி விட்டதற்காக நாங்கள் உயிர்ப்பலிகளைத் தரமுடியாது. சேதுசமுத்திரத் திட்டத்திலும்தான் முடக்கினீர்கள். அது என்னவாயிற்று? சட்டமன்றக் கட்டடத்தில் முடக்கினீர்கள் அது இன்று என்னவாயிற்று? அலைக்கற்றை ஊழலிலும், ஸ்விஸ் வங்கிகளிலும் இன்னும் பிற ஊழல்களில் முடங்கிக் கிடக்கிற பல லட்சம் கோடிகள் என்னவாயிற்று?
தமிழக முதல்வர் செயலலிதாவிற்கு வேண்டுகோள் வைக்கிறோம். நச்சு நிறைந்த பார்த்தீனியம் செடிகளை ஒழிப்பேன் என்று சூளுரைக்கிறீர்கள். தென் தமிழகத்தைக் சுடுகாடாக்க வந்திருக்கும் கூடங்குளம் அணுஉலையை தடுத்து நிறுத்துங்கள்.
அறப்போராட்டங்களுக்கு மதிப்பளித்து வெற்றி தாருங்கள்! தோற்றுப் போகும் மக்களின் அறப்போராட்டங்களே ஆயுதப்போராட்டங்களின் வித்தாகிப் போகிறது! அந்த விரும்பத்தகாத சூழல்களை அறவே அகற்றிட வேண்டுமானால், ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் இங்கே வைக்கிற இந்த கோரிக்கைக்கு செவி மடுங்கள், செயற்படுங்கள்” என்று தனது கண்டன உரையில் அரிமாவளவன் தெரிவித்தார்.

சிறை என்னச் செய்யுமடா?



சிறை என்னச் செய்யுமடா?

சாராய விற்பனை செய்தவர்கள் இப்போது கல்விக்கூடம் நடத்த வந்துவிட்டார்கள்!
கல்விக்கூடங்களைத் திறக்க வேண்டிய அரசு, சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறது!!
இதுதான் இந்திய சனநாயக கூத்துக்கு ஒரு சோற்றுப் பதம்!
குருதி குடித்த இராசபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு!
பக்கவாதத்தால் துடித்து பண்டுவம் தேடிவந்த பார்வதியம்மாளை தரையிறங்கவிடாமலேயே திருப்பி அனுப்புகிறார்கள்! 

பார்வதியம்மாள் ஈழ தேவனைத் தன் கருவறையில் சுமந்த பாக்கியவதி, அவ்வளவுதான் குற்றம்! இதுதான் காந்தி தேசத்தின் கடுக்காய்ப் பத்தினித்தனம்! இங்கு எல்லாமே தலைகீழ்தான்!
மன்னராட்சி முடிந்து விட்டது என்கிறார்கள்! சோனியாவின் பேரனுக்கு பிள்ளை பிறந்துவிட்டதா? என்று காங்கிரசுத் தொண்டர்கள் அடுத்த தலைவருக்காக பிரசவஅறை வாயிலில் காத்துக் கிடக்கிறார்கள்! கருணாநிதியின் பேராண்டிகளுக்கு கிடைக்கிற மரியாதை தி.மு.க.வில் அறிஞர்களுக்கும் ஆற்றல் மறவர்களுக்கும் கிடைக்காது! கோவைத் தமிழ் மாநாட்டில் வா.மு. சேதுராமன் கால்கடுக்க நிற்கிறார். அவரது மீசையின் அளவுகூட வளராத கருணாநிதி வீட்டுக் குஞ்சுகளும் பிஞ்சுகளும் இருக்கைகளில் இறுக்கமாக உட்கார்ந்திருக்கிறார்கள்! அன்பழகன், துரைமுருகன் போன்ற தலைசிறந்த “அறிவாளிகளுக்கோ” எப்போதுமே 23ம் புலிக்கேசியின் புகழ்பாடும் ஓமணாட்டிப் புலவர்களிள் நிலைதான்!
சீமானைச் சிறைப்படுத்தியிருப்பது என்பது ஏற்கெனவே சிறுமைப்பட்டுக் கிடக்கும் சனநாயகத்தின் மீது தமிழகஅரசு மேலும் “நீர்”பாய்ச்சியிருக்கிறது! (சிறுநீர் என்று வாசித்துத் தொலைத்துவிடாதீர்கள்!) என்றுதான் எடுத்துக் கொள்ளமுடியும்! உரிமைக்குக் குரல் கொடுக்கிறவர்களுக்கும், விடுதலைக்கு வழி வகுக்கிறவர்களுக்கும் ஆண்டை அரசுகள், காலாகாலமாக அடக்குமுறைகளை ஏவியும் கொடுஞ்சிறைகளைப் பரிசாக்கியுமே வந்திருக்கின்றன! வ.உ.சி.யைச் செக்கிழுக்க வைத்தது! ஆனால் கயவன் ஆஷ் துரையைப் பாதுகாத்தது! பத்து அல்கொய்தாப் போராளிகளைத் தேடி ஆப்கான் மலைகளில் குண்டுகளை அள்ளித் தெளிக்கிறது அமெரிக்கா. பலநூறு பேரை போபாலிலிருந்து நேரே பரலோகத்திற்கு அனுப்பிவிட்ட ஆண்டர்சன்னை அதே நாடு பொத்திப் பாதுகாக்கிறது! காரணம் அவன் அமெரிக்கன். தன் இனம் தன் மக்கள் என்று வரும்போது மாந்த உரிமை, மற்றவர் உரிமை என்று எவனும் பார்ப்பது கிடையாது. ஆனால், இதிலும் இந்த நாடு தலைகீழ்தான்! 534 மீனவர்களை 25 ஆண்டுகால இடைவெளிக்குள் தொடர்ந்து சுட்டும், சுடாமலும் கொன்று குவித்த சிங்கள அரசை வலுவாக எதிர்த்து சாவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலாத பேடி அரசுகள், அதாவது திராவிட மற்றும் இந்திய அரசுகள் இன்று தங்களுக்குள் வாய்ச் சவடால் அடித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் லாவணி பாடிக்கொண்டு அரசியல் சித்து விளையாடிக் கொண்டு கொல்லப்பட்ட கொடுமையை நரகல் ஊற்றி மூடப் பார்க்கிறார்கள். ஆனால், மானமுள்ள தமிழருக்கோ நெஞ்சு பதை பதைக்கிறது! இதில், ஈனத் திராவிடனுக்கும், திராவிடச்சிக்கும் ஓர்மை எங்கிருந்து பொத்துக்கொண்டு வரும்? ஏமாளித் தமிழனின் எதிர்பார்ப்பை என்னவென்று சொல்வது?
“இவன் தமிழனல்லன், திராவிடன், திராவிடன், திருடன், திருடன்” என்று உயிர் சோர்ந்து போகும் அளவிற்கு உச்சக் குரலில் பல்லாயிரம்முறை கத்திக் கத்திச் சொன்னபோதும் மதியாத தமிழ் நெஞ்சங்கள் இன்று உறவை இழந்து, பல்லாயிரம் உயிர்களை இழந்து, போர் மறவர் பலரை இழந்து, கண்ணீரில் கரைந்து, கனவுகளைக் கலைத்து, நனவுகளைக் காவுகொடுத்து மீனவர் பலரை இழந்து இறுதியில் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தத் தமிழனைக் கொடுஞ்சிறையில் தள்ளி கொடுமை செய்யும்போதுதான் மெல்ல விழிக்கிறோம்! காலந் தாழ்த்தி வேதனையோடு விழிக்கிறோம்! விழிநீர் முட்ட, “திராவிடர்ஆட்சியில் தமிழர் வாழவும் முடியாது, பேசவும் முடியாது” என்று புலம்பிப் பலம்பி நொந்து அழுகிறோம்.
சாராயம் விற்று சம்பாதித்த காசை தேர்தலின் போது தமிழனின் கையில் திணித்து வெற்றி நங்கையின் கற்பைச் சூறையாடியவனாயிற்றே! கண்ணகி போன்ற உன் வீட்டுக் கற்புப் பெண்ணின் காவலுக்கு தமிழன் உன்னை நம்பி வைத்தால், எச்சில் காசை எண்ணி எடுத்துக் கொண்டு தேர்தலையேக் கற்பழிக்க விட்டுவிட்டாயே! இப்போது சனநாயகம் கற்பிழந்து கலையிழந்து நடுத்தெருவில் நாறுகிறது பார்! பத்துத் தேர்தலைப் பதம் பார்த்தவன், மொத்தத் தேர்தலையும் முழுங்க இப்போது போட்டுவிட்டான் திட்டம்! காவலனுக்குக் காசு! நொள்ளனும் கள்ளனும் கூட்டு! நாறப்போகுது நாடு!
ஒரு சேலை வாங்கினால் இன்னொரு சேலை இலவயம் என்று வணிகன் விளம்பரம் செய்கிறான். அதற்குப் பெயர் ஆடித் தள்ளுபடி என்கிறான்! நேற்று 100 ரூபாய்ககு விற்ற சேலையை இன்று 300 என்று விலை போட்டு மற்றொரு 100 ரூபாய்ச் சேலையை இலவயமாகக் கையில் திணித்து கமுக்கமாய் ஒரு 100யை அள்ளிக் கொண்டு போகிறான். இலவயச் சூழ்ச்சி இதுதான்! இழித்தவாயன், ஏமாளி, நுகர்வுவெறியர் ஆகியோர் இருக்கும்வரை வணிகனின் இலவயச் சூழ்ச்சிக்கு வெற்றிதானே! அரசியல்வாதி கற்றுக் கொண்டதும் அங்கிருந்துதான்! சாராயத்தில் சம்பாதிக்கிற கோடிக் கோடியான பணத்தை கிலுகிலுப்பை இலவயம் காட்டி விளம்பரம் தேடுகிறான். இறுதியில் சனநாயகத்தையும் மொத்தமாக விலைக்கு வாங்கிவிட்டான். வாக்கு ஒன்றுக்கு விலை இவ்வளவு என்று வெட்கமின்றி நிர்ணயிக்கிறான். சனநாயகத்தைப் பட்டப்பகலில் பச்சைப் படுகொலை செய்யும் வந்தேறிகளையும் களவாணிகளையும் தடுக்க எந்தச் சட்டம் பாய்ந்து கிளறப் போகிறது? திராவிடச் சூழ்ச்சியின் மொத்தச் சுருக்கமும் இதுதான்! “எப்படியாவது ஆட்சியைப் பிடி, அதிகாரத்தைத் தக்க வை! அதுவரைக்கும் பொய்யைச் சொல்! பிடித்தபின் நையப் புடை!” நம்பி நம்பிக் கெட்ட தமிழினமோ மாறி மாறி திராவிட வந்தேறிக¬ளுக்கே வாக்களித்து வந்திருக்கிறது! கருணாநிதியின் துணிச்சலோ அதிஉச்சம்! தமிழை வைத்தே தமிழர்களை ஏய்க்கிறார், ஏமாற்றுகிறார்! தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இந்திக் கூட்டுக் குழுவுக்கு மனதார முட்டுக் கொடுக்கிறார். மறுபுறம் தமிழ்ச் செல்வன் மறைந்தால் கவிதை புனைகிறார். சிங்களப் படைகள் மீனவ மக்களைச் சுட்டுக் கொன்றால் வேடிக்கை பார்க்கிறார். மறுபுறம் வெகுண்டெழும் மக்களை ஒடுக்கச் சட்டம் கொண்டு வருகிறார். நண்பர்கள், நெருங்கியவர்கள் மறையும்போது, கண்ணீர்தான் வரும்! கவிதை வராது! கருணாநிதிக்கு அண்ணா இறந்தாலும் கவிதைதான், தமிழ்ச்செல்வன் இறந்தாலும் கவிதைதான்! கலைஞர் அல்லவா? கலையில் வல்லுனர் அல்லவா? ஏமாளிகள் இருக்கும்வரை ஏய்க்கிறவனுக்குப் பொற்காலம்தானே!
திராவிடம் இந்த மண்ணில் மயக்கத்தை விதைத்தே மக்களைக் காயடித்திருக்கிறது! அண்ணாவின் அடுக்குமொழிப் பேச்சில் மயங்கியவர்கள் உண்டு! ஆனால், கீழவெண்மணிப் படுகொலையின் மூலநாயகன் கோபால கிருட்டிண நாயுடுவைத் தண்டிக்காமல் தப்புவிக்க விட்டதும் அவருடைய அரசுதான்! “அடைந்தால் திராவிடநாடு அன்றேல் சுடுகாடு” என்று வசனம் பேசி மக்களுக்கு உசுப்பேற்றிய அண்ணா அவர்கள், பதவி வந்தபோது, “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுகிறோம்.. ஆனால், அதற்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன” என்கிறார். பின் எதற்காகக் கைவிடுகிறார்? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களைச் சரிக்கட்ட கருணாநிதியை எழும்பூருக்கு அனுப்பி வைத்துச் சமரசம் செய்தவரும் அவரே! பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது தவறு! பாவாணர் பசியோடுதான் இலக்கு தவறாமலும் மானம் இழக்காமலும் இருந்தார். பதவி என்று வந்தால் பத்தென்ன? பதினாரும் இவர்களுக்குப் பறக்கும்! “மானம் எங்களுக்கு வேட்டி போல, பதவி எங்களுக்குத் துண்டு போல” என்றார்கள்! ஆனால், திராவிடச் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இவர்கள் எவருமே “வேட்டி” கட்டவேயில்லை!
பின்னர் கருணாநிதியின் காலம் வந்தது. திராவிடம் என்ற நச்சுப் பயிர் கொழுகொழுவென்று வளர்ந்தது இவரது காலத்தில்தான்! சாராயம் தமிழகத்தின்மீது திணிக்கப்பட்டது! திரைப்பட மாயை புகுத்தப்பட்டது! வன்முறைவழி அரசியல் அரங்கேறத் தொடங்கியது! “அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்பது பராசக்தியில் கருணாநிதியின் திரைப்பட வசனம். ஆனால், மஞ்சள் துண்டு, சாத்திரம், சோதிடம் என்ற எல்லாப் பீடைகளும் புடைசூழ வாழ்கிறார். இவரது காலத்தில்தான் பிறங்கடை (வாரீசு) அரசியலால் நாடு நாறியது! பின்னர் இப்போது “அழகிரித்தனம்” என்ற தேர்தல் சித்து விளையாட்டினால் நொந்து அழிகிறது! திராவிட வளர்ச்சியின் மூலப்பொருள் இவைகள்தான்!
யூதனையும் மிஞ்சி வானுயர்ந்து நிற்கவேண்டிய தமிழரின் வாழ்வு இன்று சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது! தமிழரின் அறிவியலும் ஆற்றலும் விழலுக்கிரைத்த நீராகிப் போனது! தமிழரின் தன்மானமும் தனிச்சிறப்பும் ஒழிந்து போயின! மூன்று இலட்சத்திற்கும் மேலான மக்களை விடுதலைப் போரில் இழந்து நிற்கிறோம்! தமிழகமெங்கும் குடியினால் மனநலனும் உடல்நலனும் குன்றிய ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களைக் காண்கிறோம்! சிறுதிரையும் பெருந்திரையும் விதைக்கிற பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு பல்லாயிரம் மக்கள் பலியாகிக் கிடப்பதைக் காண்கிறோம்! மொழியின் சீர் இழந்து போலிகளின் வெற்று ஆர்ப்பரிப்பில் மயங்கிக் கிடக்கிறோம்! தமிழர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரஇயலா இழிநிலையில் தவிக்கிறோம்! வணிகமும் பொருளியலும் வந்தேறிகளிடம் சிக்கித் தமிழர்கள் பெரும்பாலும் எடுபிடிகளாகவும், தொண்டர்களாகவும் இருப்பதையேக் காண்கிறோம்! தன் மக்களுக்கு அரணாக, குரலாக, அரவணைப்பாக இருக்க வேண்டிய தாய்த் தமிழக மண்ணும் மானமும் திராவிடத்தால் வீழ்ந்து கிடக்கிறது! என்னே கொடுமை இது!
கேரள வனத்துறையினர் சுற்றுலா போன தமிழ்ப் பெண்களை நிர்வாணமாக்கி வதை செய்து படம் எடுத்து இணையத்தில் உலா விடுகிறார்கள்! தமிழகம் தூங்கிறது. பல காலமாக அங்கு இப்படித்தான் நடக்கிறது, ஆனால் வெளியே சொல்ல அஞ்சுகின்றனர் என்கிறார்கள்! கர்நாடக எல்லையிலும் பேருந்துகளில் தமிழ்ப் பெண்கள் நிம்மதியாகப் பயணம் செய்ய இயலாது! கன்னடக் காடையர்களின் சீண்டலுக்கு உள்ளாகி அடங்கி ஒடுங்கிப் போக வேண்டியதாயிருக்கிறது! ஆக, சிங்கள் உயிரைக் கொன்றான், கற்பைத் தின்றான் என்பது மட்டுமல்ல உண்மை! இந்திய இறையாண்மையின் அங்கங்களும் சொந்தங்களும் தமிழர்களுக்கும் தமிழச்சிகளுக்கும் இழைக்கிற கொடுமைகள் பதிவு செய்யப்படாமல் அழிந்து போகின்றன!
நடிகை ரம்பாவின் திருமணத்திற்குப் போகிறார் கருணாநிதி! ரசினிகாந்தின் மகள் திருமண அறிவித்தல் நிகழ்விலும் இருக்கிறார்! குசுப்புவை இழுத்துப் போடுகிறார், (தி.மு.க.விற்கு)! ஆனால், தமிழகப் பெண்கள் மலையாள வனத்துறையினரால் மானபங்கப்படுத்தப்பட்டதற்கு அவர் கண்டனம்கூடத் தெரிவிக்கவில்லையே! திராவிடத்தின் தலையாய முதலீடு கூத்து! வடுகக் கூத்து!! கேரளத்து நம்பூதிரிகள், தமிழகத்துப் பிராமணர்கள், (பார்ப்பனர்கள் அல்லர்) வடுகர்கள் ஆகியோருக்கிடையில் இந்தக் “கூத்து முதலீடு” பரவலாகவும் அதுவே மற்றவர்களின் (குறிப்பாகத் தமிழர்களின்) பலவீனமாகவும் இருந்திருக்கிறது! அம்மாதிரியான கூத்தின் நீட்சிதான் வெள்ளித் திரையுக் கூத்தும், சின்னத் திரைக் கூத்தும்! கன்னடப் பிராமணரான் பாலச்சந்தரின் படங்களில் திணிக்கப்பட்ட வக்கிரங்கள் எல்லாம் வடுகத்தின் நீட்சிதான்! கருணாநிதியின் பிறங்கடைகள் மிகத் தெளிவாக இன்றும் பல்வேறு சின்னத் திரை நிறுவனங்களை உருவாக்குவதிலும் வெள்ளித்திரை உலகை விழுங்குவதிலும் கருத்தாகக் கவனமாக இருப்பது உன்னிப்பாய்க் கவனிக்கத் தக்கது! உருவம் வேறுபடுகிறது! உள்ளடக்கம் அன்றும் இன்றும் ஒன்றுதான்! “சதையால் சிதை!” என்னும் எளிய உத்தி! வடுகச் சின்னத்தனம் தமிழ்ப் பண்பைச் சூறையாடிவிட்டது! அதனால்தான், தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட செய்தி திராவிடங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை! ஆனால், திராவிட நரகலில் ஊறிப்போன தமிழிளம் காளையரும் கடுப்பாகி களம் இறங்கவில்லையே! இது வருத்தத்திற்குரியது! காரணம், நச்சுத் திராவிடம் சிரசுக்கு ஏறிவிட்டது! திராவிடப் பித்து வீரமுள்ள தமிழ் இளைஞர்களை முடக்கிப் போட்டிருக்கிறது! ஆனால் பித்தம் தெளிய மருந்தொன்று உண்டு! நாவில் தமிழ் என்னும் அமுதத்தையும், நடுநெஞ்சில் தமிழர் தேசியம் என்கிற அருமருந்தையும் அள்ளிப் பருகினால் நோய் நீங்கும்! திராவிடம் என்ற புரையோடிப்போன புற்றுநோய் இருந்த இடம் தெரியாது அகலும்! திரிவடுகரின் அடிவயிற்றை கலக்கோ கலக்கு என்று கலக்குவது இவை மட்டுமே!! தமிழனுக்கு ஒரு தேசம் என்று தும்மினாலேயே வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வந்தேறிகள் குரைக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
எதிரும் புதிருமாய் இருப்பதுபோல நாடகமாடும் திராவிடனும் பிராமணனும் கைகோர்த்துக் கொள்கிறான். உற்றுப் பாருங்கள் கருணாநிதிக்கும் சோவுக்கும் செயலலிதாவுக்கும் ஒரே கொள்கைதான் இருக்கிறது! இவர்கள் மறைத்துச் செய்வதை அவர்கள் வெளிப்படையாயும் அவர்கள் மறைத்துச் செய்வதை இவர்கள் வெளிப்படையாயும் செய்வார்கள்! தமிழ்த்தேசியத்தைக் கழுத்தறு என்று சோ வெளிப்படையாகச் சொல்லுவார்! கருணாநிதி கமுக்கமாய் காரியம் செய்வார்! தினமலரும், தினமணியும் பிராமணக் கொடுக்கிலிருந்து நச்சை கக்குகிறது! கருணாநிதியின் காவல்துறை தடி தண்டலோடு வந்து உருட்டி மிரட்டி கைது செய்கிறது! திராவிடங்களைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடு என்பது வந்தேறிகளின் வேட்டைக்காடு! வேலியில்லா நாடு! திராவிட நாடு! வந்தவரெல்லாம் மேயலாம்! ஆனால், தமிழ், தமிழ்த் தேசம் என்பதோ எல்லை வரையறுக்கும் வேலை! வேலியில்லா காட்டுக்கு வேலி போட்டால் எந்த நாடோடிக்குப் பிடிக்கும்?உறவில் தாலிகூட ஒரு வேலிதான்! கூத்தாடிகளுக்கும் குலத்தாசிகளுக்கும் தாலி என்பது குத்தத்தான் செய்யும்! குமுறத்தான் செய்வார்கள்! சீமானை, நெடுமாறனை, வைகோவை அடைத்து வைத்து தமிழ்த் தேசிய குமுறலை குன்ற வைத்துவிடலாம் என்பது சீப்பை ஒளித்து திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைக்கிற அதி நுட்ப அறிவு!
கடல் அலைகளைச் சிப்பிக்குள் அடைத்துச் சிறைபிடித்துவிடலாம் என்கிற நப்பாசை!
சிறை வாழ்வு, ஆதிக்க அடக்குமுறை ஆகியன விடுதலை நாற்றுக்கு நல்ல எரு என்பது காலாகாலமாக வரலாறு சுட்டும் பாடம்!
தமிழகமும் அதையே மெய்ப்பிக்கப் போகிறது!

தமிழர் களம் - "நாம் தமிழர் இயக்கம்" திராவிடத்தின் கடைசிச் சாவடி!


தமிழர் களம் - "நாம் தமிழர் இயக்கம்" திராவிடத்தின் கடைசிச் சாவடி!


தமிழின விடுதலைப் பாதையில்தான் எத்தனைச் சறுக்கல்கள்! எத்தனைக் குறுக்குச்சால்கள்! எத்தனைக் குளறுபடிகள்! எத்தனை நயவஞ்சக நாசகாரச் செயல்கள்!!
முள்ளிவாய்க்காலில் நடந்த கோரம்தான் இந்தியம், திராவிடம் ஆகிய இருபெரும் நாசகாரச் சக்திகளின் முகத்திரைகளை முற்றாகக் கிழித்துப் போட்டது! தமிழினத்தைப் பீடித்துள்ள கொடுநோயின் கோர வெளிப்பாடுகளில் ஒன்றுதான் முள்ளிவாய்க்கால் கொடூரம்! தமிழருக்குக் கண்டுள்ள நோய் இந்தியம், திராவிடம் என்னும் கொடுநோய்கள்!
“நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்றார் வள்ளுவர். நோயின் மூலத்தை அறிந்து குணமாக்கு என்பது அவரது அறிவுரை! ஈழத்தில், பர்மாவில், மலேசியாவில், கர்நாடகத்தில், தமிழகத்தில் நடக்கும் கொலைகள், நசுக்கல்கள், போர், ஒடுக்குமுறை ஆகியனவற்றின் மூலம் திராவிடம் இந்தியம் என்ற கொடுநோய்களில் இருக்கிறது! ஒரு காலத்தில் இந்திய நோயைத் தீர்க்க நாம் நம்பி எடுத்த நச்சு மருந்து திராவிடம்! அதுவே இன்று ஓர் இனத்தின் உயிர்க்கொல்லி நோயாக மாறி நிற்கிறது!
தமிழகத்தின் அரசியல் முதல் கலை பண்பாடுவரை வடுக வந்தேறிகளின் கொற்றம் இன்று கொடிகட்டிப் பறக்கிறது! கேட்க நாதியின்றி வந்தேறிகள் அடிக்கும் கொள்ளை, வளைக்கும் நிலங்கள், பறிக்கும் அதிகாரம் தமிழரைக் குலை நடுங்க வைக்கிறது!
இந்நேரத்தில் வந்தது நாம் தமிழர் இயக்கம்! மறைந்த திரு. ஆதித்தனார் அவர்களின் முன்னெடுப்பால் ஒருகாலத்தில் தோன்றுவிக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கம் அகண்ட தமிழகம் பற்றிப் பேசியது! ஈழம், இழந்த பகுதிகள் உள்ளடக்கிய தமிழகம் என்று முன்மொழிந்தார் திரு. ஆதித்தனார்! ஆனால், திராவிடக் கட்சிகளின் நெருக்கடிகளுக்கு நடுவில் அந்த நாம் தமிழர் இயக்கம் மெல்ல மறைந்து போனது!
“தமிழ், தமிழர்” என்று மேடைகளில் பேசி ஈர்த்த திராவிட இயக்கங்கள்தான் இனித் தமிழரைக் காப்பாற்றப் போகிறது என்ற நம்பிக்கையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தி.க., தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. என்று வரிசையாக அணிவகுத்தத் திராவிடக் கட்சிகளில் போய் சேர்ந்தார்கள்! உதட்டில் தமிழ்பேசி ஈர்த்த இந்த கட்சிகளுக்குள் இழுக்கப்பட்ட தமிழர்கள் உள்ளே வந்தபோது ஓராயிரம் தேள்கள் ஒருங்கே கொட்டியதுபோல அதிர்ந்தார்கள்! தலைமையெல்லாம் தெலுங்கர், கன்னடர், மலையாளிகளிடம் இருந்தன! அவர்கள் வைத்ததே சட்டம்! போட்டதே வட்டம்! என்ற நிலையே இருந்தது! தமிழர்கள் தொண்டர்களாக, எடுபிடிகளாக, கொடிபிடிப்பவர்களாக, குற்றேவல் புரிபவர்களாக சிதைந்து கிடப்பதைக் கண்டார்கள். ஆனால், மளமளவென ஆட்சி அதிகாரத்தை பிடித்துக் கொண்ட அவ்வந்தேறிகள் தமிழர்கள் மீதான பிடியை இறுக்கினார்கள்! கருணாநிதி, எம்.ஜி.ஆர், வீரமணி, பெரியார், செயலலிதா, விசயகாந்து, வைகோ, ஆற்காட்டு வீராச்சாமி, வேலு, நேரு, நெப்போலியன் என்று சாரைசாரையாக வந்தவர்கள் அனைவருமே வந்தேறிகள் என்ற அதிர்ச்சி தமிழர்களை உறைய வைத்தது!
தமிழினத்தைச் சீரழித்தவர்களும், சீரழிக்கத் துணைபோனவர்களும் இவர்களே! அதன் உச்சமே முள்ளிவாய்க்கால்! ஆனால் தலைமை வழிபாட்டு அரசியலில் சிக்கித் தவித்தவர்களுக்கு ஒட்டுமொத்த இனத்தைவிட ஒரு சில வழிபாட்டு உருவங்களே முதன்மையாகிப் போயின!
இந்தக் காலத்தில் திரு. சீமான் தலைமையில் மீண்டும் தோன்றிய நாம் தமிழர் இயக்கம் தமிழ் மக்கள் நடுவில் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியது! ஆனால், இதை வழிநடத்தும் சீமான் ஒரு தமிழராக இருந்த போதிலும் திராவிட இயக்கத்தின் நரகல் கொள்கையில் சில காலம் புரண்டவரே இவர்! ஈழம் சென்று தலைவரைச் சந்தித்தவர் என்கிற ஒரு பெருமை, திரைத்துறைப் பின்புலம், ஆவேசப் பேச்சு ஆகியன இளைஞர்களுக்கு அவர்பால் ஓர் ஈர்ப்பை உண்டுபண்ணியது!
திராவிடப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் மெல்ல மெல்ல தமிழர் தேசிய அரசியலுக்கு அவர் வந்துவிடுவார் என்ற முழு நம்பிக்கையில் இருந்தோம் நாம்! தமிழ்த் தேசிய அரசியலைப் பேசினாலும் மலையாளத் தெலுங்கு கன்னட எதிர்ப்பை அவ்வப்போது முறுக்கேறிய விதமாகப் பேசினாலும் அவர் எடுத்த படங்களில் என்னவோ மலையாளிகளுக்கும் மற்றவர்களுக்கும்தான் முன்னுரிமை கொடுத்தார்! நெருடலாய்த்தான் இருந்தது! விட்டுத் தள்ளினோம்.
இலங்கை சென்று படம் எடுத்தவனை உதைப்பேன், மறுப்பேன், தடுப்பேன் என்ற அளவிற்குப் பேசியவர் “ரத்தச் சரித்திரம்” வந்தபோது பம்மிக் கொண்டது ஏன்? என்ன புரிதல்? யாருடன் புரிதல்? விளங்கவில்லை. சிங்களனை அடிப்பேன் என்று சொன்னதற்காக ஐந்து மாதச் சிறை! ஐந்து மாதத்தில் ஆறுமுறை தமிழனைச் சிங்களன் அடித்தான்! வெளிவந்தபிறகு, “இன்னும் உரக்கச் சொல்லுகிறேன், சிங்களனை அடிப்பேன்” என்கிறார். எப்போது?
சிங்களனை அடிக்க ஆறு கோடித் தமிழரும் துடித்துக் கொண்டு இருக்கின்றனர்! ஆனால், திராவிட அரசு நெம்பி நொங்கு எடுத்துவிடுமே! திராவிடத்தை ஒழித்தால்தான் சிங்கள எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்பதெல்லாம் எடுபடும். அன்றேன், இன்னும் உரக்க உரக்க சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான், அடியையும் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!
அரசியற்படுத்தப்படாத அப்பாவித் தமிழ் இளைஞர்கள் தமிழின ஓர்மை கொண்டு வரும்போது அவர்களுக்கு அப்பட்டமாக “ராமசாமி நாயக்கர்தான் தமிழ்த்தேசியத் தந்தை” என்று அறிமுகப்படுத்துவதில் கருணாநிதிக்கும் இவருக்கும் என்ன வேற்றுமை? சரி, அதுதான் போய்த் தொலைகிறது என்று பார்த்தால், கட்சியின் அனைத்து மட்டங்களிலும் தெலுங்கர்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. தெலுங்கச்சி சரஸ்வதி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட பல மாவட்டத் தலைவர்களும் தெலுங்கரே என்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி! எப்படி திராவிடக் கட்சிகள் தமிழ் தமிழர் என்று உதட்டளவில் பேசி நடைமுறையில் அன்னியர் ஆதிக்கத்தைத் திணித்ததோ அதையேதான் அச்சு அடித்தாற்போல நாம் தமிழர் இயக்கத்தின் சீமான் செய்திருக்கிறார்! கட்சிக்குள் அப்பட்டமாக சுபவீயின் ஆட்கள் சுங்கான் இயக்குகிறார்கள். கே.என்.நேருவின் நேரடி வழிகாட்டுதலில் வந்தவர்கள் குந்தியிருக்கிறார்கள். கருணாநிதியின் காலடிவருடிகள் இருக்கிறார்கள்! “திராவிடப் பித்தலாட்டங்கள்” வகைதொகையில்லாமல் திரிகின்றன! எப்படி இவர்கள் வந்தார்கள்?
திராவிடம் என்கிற நரகல் கொள்கையை வகைதொகையில்லாமல் உண்டு களித்ததன் விளைவே இது! கட்சி தமிழருக்கானது! தலைமை தெலுங்கருக்கானது!! என்றால், இதை நாம் தமிழர் இயக்கம் என்று ஏன் அழைக்க வேண்டும்? பேசாமல் நாம் திராவிடர் என்றோ, நாம் தெலுங்கர் என்றோ அழைத்துவிடலாமே! மீண்டும் தமிழர்கள் கொடி பிடிக்க, வசூலிக்க, சுவரொட்டி ஒட்ட, தொண்டாற்ற பிறகு வழித்துத் துடைத்துப் போட என்கிற நிலைக்கு வந்துவிட்டதே!
எல்லாமே இழந்து விட்டோம்! இனி எவனுக்கும் நாம் சமரசம் ஆகப்போவதில்லை! இன்னும் இந்தத் திராவிட மலத்தைச் சுமக்க தமிழன் என்ன இளிச்சவாயனா? சீமான் அவர்களே, கட்சியிலிருந்து அன்னியரை வெளியேற்று! வந்தேறி எதிர்ப்பை முன்னிறுத்து!
ஈழத் தமிழனையும் இங்குள்ள தமிழனையும் காவுகொடுக்கக் காரணமான திராவிடத்தை நாம் தமிழருக்குள் கொலுவேற்றி வைத்திருப்பது மாவீரர் கல்லறையில் நீங்கள் மலத்தை அள்ளி வைப்பதற்குச் சமம்! மலம் உங்களுக்குச் சந்தனம் போல மணக்கலாம்! அள்ளி அள்ளி பூசிக் கொள்ளுங்கள்! ஆனால், திராவிட நரகலுக்கு தமிழ்நாட்டில் இனியும் கடைவிரிக்க தமிழனின் பேரைச் சொல்லி ஏமாற்றாதீர்கள்!
தமிழனை ஏமாற்ற பெரியார் செய்த உருமறைப்பு முடிந்தது! பின்னர் கழகங்கள் செய்த உருமறைப்பு முடிந்தது! அண்மையில் சிறுத்தை செய்த உருமறைப்பும் கிழிந்தது! இனி உங்களதுதான் கடைசி உருமறைப்போ! உங்களுக்கும் கருணாநிதிக்கும் வீரமணிக்கும், சுபவீக்கும், பெரியார்தான் தந்தை என்றால், பாவேந்தர் பாணியில் நாங்கள் உங்களைக் கேட்க வேண்டியிருக்கிறது, “தாய் உன்னை யாருக்குப் பெற்றாள் கூறு!” நீங்களெல்லாம் திராவிடர்கள் என்றால் அடித்துச் சொல்வோம், நாங்கள் தமிழர்கள்! தமிழர்கள்! என்று!!
குமுறலுடன்
பொன்னேரி தாசன்

தமிழர் களம் - கூட்டணி அல்ல கூத்தணி! - அரிமாவளவன்


தமிழர் களம் - கூட்டணி அல்ல கூத்தணி! - அரிமாவளவன்

அரசியல்வாதிகள் இழந்த ஆட்சியை கைப்பற்றுவதிலும் இருக்கிற ஆட்சியைத் தக்க வைப்பதிலும் குட்டிக்கரணம் போட்டு முயற்சிக்கிறார்கள். தமிழர்களோ உரிமை அரசியல் என்ற உயரிய இடத்திலிருந்து சறுக்கி சலுகை அரசியல் என்ற சகதியில் சிக்கி இன்று இலவய அரசியல் என்ற சாக்கடைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தச் சாக்கடைகூட பலருக்குச் சுகமாக இருக்கிறது!
"மிக்சி, கிரைண்டர், 35 கிலோ அரிசி ஆகியன இலவயம்" என்று கருணாநிதி தனது கட்சித் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபோது அவர் முகத்தில் ஓடிய சிரிப்பலையும் அதைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பாவி மக்களின் கரவொலி அலையும் ஒரு விலங்காண்டி உலகின் உச்சத்தில் இருக்கிறோம் என்று கருதத் தோன்றியது. இந்தக் கோமாளித்தனத்தை எதிர்கொள்ள செயலலிதா இதற்கு ஒரு படி மேலே போயுள்ளார். மேற்கு வங்கத் தேர்தலில் போட்டியிடும் திரினாமுல் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் எந்த இலவயத் திட்டமும் இல்லை! பொறாமையாக இருக்கிறது. மின்சாரம் இல்லாத தமிழ்நாட்டில் கருணாநிதி மிக்சிக்குப் பதிலாக ஆட்டுக்கல்லையே அன்பளிப்பாகக் கொடுத்துவிடலாம்! அ.தி.மு.க அறிக்கையில் "அவர் தருகிற ஆட்டுக்கல் என்னடா ஆட்டுக்கல்? காலை தோறும் ஒரு லிட்டர் ஆட்டிய தோசை மாவு இலவயம்" என்று அறிவித்தாலும் வியப்படையப் போவதில்லை. கு.ப.கிருட்டிணன் போன்றவர்கள் தோசைமாவு ஒப்பந்தத்தை எடுத்து ஒரு கை பார்த்தாலும் பார்த்துவிடுவார்கள்.
கருணாநிதி சொல்லும் ஒரு மாவரைக்கும் எந்திரத்தின் விலை 2000 ரூபாய் என்றும் அதற்காக இரண்டு கோடி எந்திரங்களைத் தமிழக அரசு வாங்குகிறது என்றும் வைத்துக் கொள்வோம். இதற்கு நாலாயிரம் கோடி ரூபாய் வேண்டும். இதைக் கருணாநிதி தன சொந்தப் பணத்திலிருந்தா கொடுக்கப் போகிறார்? அல்லது இவர்கள் அதிகாரத்திலிருந்தபோது அடித்த கொள்ளையிலிருந்து தரப்போகிறார்களா? அரசியல்வாதி தன சொந்தப் பணம் என்று கணக்குக் காட்டி வைத்திருக்கிற சொத்தும் ஊழல் வழியாக மறைவாக குவித்து வைத்திருக்கும் பணமும் உண்மையில் மக்களுடையனவே! ஆனால் கடலுக்குள் வீசிய கருங்கல் எப்படி மிதக்காதோ அதுபோல அடித்த கொள்ளைப் பணம் இப்போது திரும்பாது. "கடலை வற்றவைத்து கருங்கல்லை மீட்டால்தான் உண்டு"! அப்படியானால் இந்த 4000 கோடி எங்கிருந்து வரப்போகிறது? இதே அப்பாவி மக்களிடமிருந்தே வரும்! உப்பு, மிளகாய், புளி, பீடி, சுருட்டு என்று அத்தனைக்கும் வரியை உயர்த்தி பல்லாயிரம் கோடியை மீண்டும் சுருட்டிவிட்டு அதிலிருந்துதான் 4000 கோடியை மக்களுக்கு எலும்புத் துண்டு போல வீசி எறிவார்கள்! "ஒரு சேலை வாங்கினால் ஒரு சேலை இலவயம்" என்று விற்கிற மார்வாடி தன சொந்தக் காசிளிருந்தா உங்களுக்குக் கொடுக்கிறான்? நேற்றுவரை 100 ரூபாய்க்கு விற்ற சேலைக்கு இன்று 300 என்று விலை வைப்பான். இன்னொரு சேலையை இலவயம் போலக் கொடுப்பான். ஒரு சேலையின் அடக்க விலை 50 ரூபாயாகத்தான் இருக்கும். நேற்றுவரை ஒரு சேலைய 100 ரூபாய்க்கு விற்றபோது மார்வாடிக்கு 50 ரூபாய் லாபம் என்றால் இப்போது இலவய அறிவிப்பின்போது 200 ரூபாய் லாபம் கிடைக்கிறது. அந்த 200 ரூபாயும் உன் கையிலிருந்தும் பையிலிருந்தும்தான் போயிருக்கிறது. இந்த மார்வாடிக் கணக்குகளைத்தான் இந்த வந்தேறி வடுகக் கட்சிகள் அப்படியே பிடித்துக் கொண்டு தேர்தல் களத்தில் அவிழ்த்து விட்டிருக்கின்றன.
அரசியல் கட்சிகளின் இலவய அறிவிப்புகள் என்பன மோடி வித்தை செய்து மக்களிடமிருந்து அடிக்கிற கொள்ளை, அவ்வளவுதான்! தறுதலைகளின் தரந்தாழ்ந்த அரசியல் உத்திகள் இவை! மக்களை மடையர்களாகப் பாவிக்கும் பகற் கொள்ளையரின் சித்து விளையாட்டு! திராவிடக் கட்சிகள் உங்கள் கண்ணெதிரே மக்களாட்சியைப் படுகொலைச் செய்கின்றன. "காசுக்கு வாக்கு, இலவயங்களுக்கு வாக்கு" என்று நமது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இருளுக்குள் தள்ளுகின்றன! இலவயங்கள் என்பன ஒரு யானையை வீழ்த்த வேடன் வெட்டி வைத்திருக்கும் குழி! இல்லை தழைகளை அதன் மீது பரப்பி வைத்திருக்கிறான். அது, பாடித் திரியும் பறவைகளைப் பிடிக்க வேடன் விரித்திருக்கும் வலை. சில தானியங்களை அதன் மீது தெளித்து வைத்திருக்கிறான். அது, பாடித் திரியும் பறவைகளைப் பிடிக்க வேடன் விரித்திருக்கும் வலை. சிலை தானியங்களை அதன் மீது தெளித்து வைத்திருக்கிறான். யானை போன்ற வலிமை உடைய தமிழரே, இல்லை தழைகளுக்குக் கீழே தெரிகிற பள்ளத்தைப் பாருங்கள். விடுதலை வானில் விரிந்த சிறகுகளோடு பறக்க வேண்டிய தமிழர்களே, தானியங்களுக்கு மேலே விரிக்கப்பட்டிருக்கும் வலையைப் பாருங்கள்! தேர்தலுக்கு முன்பாக ஒரு 100 பாமர மக்களிடமாவது இந்த எளிய கருத்தை விதைத்து அவரை விழித்துக் கொள்ளச் செய்தால் நாட்டுக்கு நீங்கள் நல்லது செய்திருக்கிறீர்கள் என்று பொருள்.
கூட்டணி அல்ல கூத்தணி!
கடைசி நேரம்வரை எந்தக் கட்சி யாரோடு கூட்டணி என்று யாருக்குமே தெரியாது! பேரங்கள் படியும்வரை பேச்சுவார்த்தைகள் நடந்தன! பேரங்கள் படிந்து இரு அணிகளான பிறகு கொள்கைக் குன்றுகள் போல மேடைகளில் முழங்கத் தொடங்குகிறார்கள். ஒரு கையில் மாட்டுப் பேரம், மறு கையில் கத்தி! பேரம் படிந்தால் கூட்டணி! பதியாவிட்டால் ஒரே குத்து! சீமானை இழுத்துக் கொண்டு அம்மாக் கூத்தணியில் சேர்த்த வைகோ இரு மாத ஓய்வில் இருக்கிறார்!
தேர்தலிலும் பல உள்குத்துகள் இருக்கும்! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "உதயசூரியனில்தான் குத்தினேன்" என்று சொன்னால் நம்பித்தானே ஆக வேண்டும்! திமுகவினரெல்லாம் மனமுவந்து காங்கிரசின் கைச் சின்னத்தில் குத்திவிட்டால் தேர்தலுக்குப் பிறகு திமுகவை உண்டு இல்லை என்று பண்ணிவிட மாட்டார்களா? அதே போலத்தான் விசயகாந்துக்கும் செயலளிதாவுக்குமான கூத்தணி உடன்பாடுகள்!
அப்பாவி மக்களை அடிமைகளாக அள்ளிக்கொள்ள அரக்கர்கள் அடித்துக் கொண்டு மோதும் இந்தத் தேர்தல் களத்தில் வழக்கம்போல தமிழ்த் தேசிய அமைப்புகள் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு விழி பிதுங்க வேடிக்கை பார்க்கின்றன! திரு. நெடுமாறன் தலைமையில் தேர்தலைத் துணிந்து சந்திப்போம் என்று முனைப்புக் காட்டிய பெரும்பாலான அமைப்புகள் ஒருகட்டத்தில் சோர்ந்து போயின! இறுதியில் கடந்த மார்ச் திங்கள் ஆறாம் நாள் தமிழர்களத்தின் முயற்சியால் ஒருங்கிணைக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் தமிழர் தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கித் தேர்தல்களம் இறங்கியிருக்கிறது. "234 லிலும் நாங்களே வெல்வோம்!" என்ற போலித்தனமான மாயைகளை விடுத்து வந்தேறித் திராவிடத் திருடர்களின் முகத்திரைகளைக் கிழிக்கவும் இந்தி தேசிய எத்தர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்கவும் தமிழர் தேசிய அரசியலை மக்கள் நடுவில் அறிமுகப்படுத்தும் அச்சாரமே இந்த அறிமுகம்.
வல்லாதிக்கத்திர்கான அரசியல் காங்கிரசு போன்ற கட்சிகளின் இந்தி தேசிய அரசியல் என்றால் வந்தேறிகளின் அரசியல் திராவிடத் தேசிய அரசியல். ஆனால், உங்களுக்கான அரசியல்தான் தமிழர் தேசிய அரசியல்! யார் வெல்ல வேண்டும் என்பதை நீங்களும் காலமும் கலந்தாலோசித்துச் சொல்லுங்கள்.

திமுக-காங்கிரஸ் கூட்டணியை கருவறுப்போம்- தமிழர் களம் அரிமாவளவன் சபதம்


திமுக-காங்கிரஸ் கூட்டணியை கருவறுப்போம்- தமிழர் களம் அரிமாவளவன் சபதம்

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 2, 2010, 16:49 [IST]
 Assembly Election Tamilar Kalam Dmk Cong
Ads by Google
Designer Salwar Kameez www.homeshop18.com/Salwar_800_Off
Get 1000 Off on Purchase of Rs 2000 Free Home Delivery. Hurry, Buy Now!
கரூர்: வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் தோற்கடிப்பதே தங்களது லட்சியம் என தமிழர்களம் அமைப்பின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் கூறியுள்ளார்.

1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மொழிவாரியாக சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் உருவான தினத்தை தமிழர் களம் கொண்டாடியது. கரூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து பேரணி முக்கிய சாலை வழியாக 80 அடி சாலையை அடைந்தது. அங்கு தமிழர் களம் கலைக்குழு சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து, பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் பேசுகையில்,

ஈழத்தில் தமிழர்களை படு கொலை செய்த போது, பெண்ணுரிமை அமைப்புகள் எங்கே போனது. தலித் அமைப்புகள் எங்கே சென்றது. கிறிஸ்துவ அமைப்புகள் எங்கே சென்றது. தமிழன் தனித்துவிடப்பட்டான். அந்த நிலைமை மாறும். அற்காக தமிழர்களம் பாடுபடும். வரும் தேர்தலில் தமிழர்களுக்கு எதிரானவர்கள் தோற்பது உறுதி. அதற்கு இப்போதே நாங்கள் களம் அமைத்துவிட்டோம் என்றார்.

இந்த பொதுக் கூட்டத்தில், எழுகதிர் ஆசிரியர் அரு. கோபாலன், எழுச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராசு, தன்மானத் தமிழ் மறவர் கூட்டமைப்பைத் சேர்ந்த புலவர் பாவிசைக்கோ, தனித்தமிழர் சேனை தலைவர் நகைமுகன், மள்ளர் மீட்புக் களம் செந்தில் மள்ளர், மறத் தமிழர் சேனை புதுமலர் பிரபாகரன், தமிழ் தேசிய கட்சி பொன்னிறைவன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே - தமிழர் களம் அரிமாவளவன் குற்றச்சாட்டு










தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே - தமிழர் களம் அரிமாவளவன் குற்றச்சாட்டு

மதுரை: தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை!. திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது என்று தமிழர் களம் அமைப்பாளர் அரிமாவளவன் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கன்னடன் கன்னடனாக இருக்கும் போது, தெலுங்கன் தெலுங்கனாக இருக்கும் போது, மலையாளி மலையாளியாக இருக்கும் போது தமிழன் மட்டும் ஏன் திராவிடனாகத் திரிக்கப்பட வேண்டும் ?

முல்லைப் பெரியாறும், ஒகனேக்கல்லும், காவிரியும், பாலாறும் தமிழகத்திற்குக் கிடைக்காமல் முடக்கப்படும்போது, தமிழ்நாட்டின் வளங்கள் மட்டும் அவர்களுக்கு வேண்டுமா? இதுதான் இந்திய இறையாண்மையின் இலக்கணமா? அல்லது இந்தியக் கட்டப் பஞ்சாயத்தில் கிடைக்கும் ஞாயமா?

கடந்த 1956 ல் மொழி வழி மாநிலமாக இந்தியா பிரிக்கப்படும்போது மொழி இன அடிப்படையிலான உரிமைகளுக்கு அது அங்கீகாரம் அளித்தது! 

ஆனால், மராட்டிய இன உணர்வுகளும், சீக்கிய இன உணர்வுகளும், கன்னடத், தெலுங்கு, மலையாள மற்றும் பிற இன உணர்வுகளும் உரிமைகளும் இந்தியத் துணைக்கண்டத்தில் மதிக்கப்படும்போது தமிழர்களின் உரிமையும் தாகமும் மட்டும் நசுக்கப்படுவது ஏன்? 

அந்தந்த மாநிலங்களை அவரவர் ஆளும்போது, தமிழ்நாடு மட்டும் திறந்த வீடாகவும் வேலியில்லாக் காடாகவும் யார் வேண்டுமானாலும் ஆளலாம், ஆட்டம் போடலாம், ஏறி மேயலாம் என்ற நிலை இருப்பது ஏன்?

வந்தேறிகள் ஆளவும் ஏய்க்கவும அரட்டவும் உருட்டவும் அவர்கள் வைத்திருக்கிற கைத்தடிதான் திராவிடம் என்கிற பொய்ப்பூச்சு! 

அடுத்து, பெரியார் என்கிற ஊதிப் பெரிதாக்கி வைத்திருக்கிற பேருரு!

தமிழர்கள் ஏய்க்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும், நசுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் காலாகாலமாக நடந்து வருகின்ற ஒன்றுதான். தாக்கினால் திருப்பி அடிப்பார்கள் என்கிற நிலை இருக்கும் போது தான் உலகில் அமைதி நிலவுகிறது. அல்லது ஏறி மேய்கிறார்கள்! 

மலேசியாவிலோ, பர்மாவிலோ, ஈழத்திலோ, கர்நாடகத்திலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் தாய்த் தமிழகம் கொதித்து எழும் என்கிற நிலை இருந்தால் பத்தரைக் கோடித் தமிழனைத் தொட எந்தக் கொம்பனுக்கும் உலகில் துணிவிருந்திருக்காது.

மாறாக, பர்மாவின் சயாம் நகரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோதோ, கர்நாடகத்தில் தமிழர்கள் வெட்டித் துண்டாடப்பட்டபோதோ, மும்பையிலும் மணிப்பூரிலும் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டபோதோ, பர்மாவிலிருந்து தமிழர் விரட்டப்பட்டபோதோ, ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் கொடுமையாகக் கொன்றொழிக்கப்பட்டபோதோ தாய்த் தமிழகத்தில் எதிர்ப்பில்லை, கொதிப்பில்லை, கொந்தளிப்பில்லை! காரணம் என்ன? திராவிடம் என்ற நச்சு போதைபோல் ஏறி சித்தம் சிதைந்து கிடக்கிறான் தமிழன்! 

ஈயும், எறும்பும், புழுவும், பூச்சியும் நசுக்கப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
காகம் ஒன்று கொல்லப்பட்டால் வானத்தையே கருப்பாக்கி காகக்கூட்டம் கரைகிறது!

ஒரு தெரு நாயைத் தாக்கினாலும் ஊர் நாய்களே ஒன்று சேர்ந்து மாந்தக் கூட்டத்தை வறுத்தெடுக்கிறது!

இரு சீக்கியர்கள் தாக்கப்பட்டதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது.
மராத்தியன் பீகாரில் தாக்கப்பட்டால் பதிலடியில் நாடு எரிகிறது!
பீகாரியைத் தொட்டால் வடநாடு கொதிக்கிறது!

இரு இசுரேலியர்களை பாலத்தீனர்கள் சிறைப்பிடித்ததற்காக இரு பாலத்தீனிய நகரங்களை தடைமட்டமாக்கி இசுரேல் பாடம் கற்பித்தது! உலகமே இப்படி இருக்கும்போது, அது இனப்பற்றாக, இனப்பாதுகாப்பாகப் பார்க்கப்படும்போது தமிழர்நாடு மட்டும் விதிவிலக்காக இருப்பது ஏன்? 


மூத்த இனம் இங்கே முடங்கிக் கிடப்பதே தன் அடையாளத்தை இழந்ததால்தான்! தமிழனைத் திராவிடனாக திரித்து சிதைத்துவிட்டார்கள். 

மீண்டும் இழந்த தமிழன் என்கிற அந்த அடையாளத்தை நாம் உணர்ந்து தக்க வைத்தால் மட்டுமே எதிர்காலத் தலைமுறையை நாம் பாதுகாக்க இயலும். இதில் சமரசம் செய்து கொண்டு அரசியல் களத்தில் ஆராவாரம் செய்து யார் களம் இறங்கினாலும் அவர் தமிழினத்தின் இரண்டகராகவோ, எதிரியாகவோத்தான் இருப்பர். 

தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை! திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.





Create SILENCE in Life


  • Always Take Extra Care of 3Things In Life

    =>Promise
    =>Love
    =>Friendship
    ...
    Because,
    They Don't Make Noise.

    But,
    When They Break
    They Create SILENCE in Life.
    See More

தமிழர் களம்


  • உயிருள்ள தமிழனெல்லாம் இதை படியுங்கள்

    சினம் கொள்ளாத இனம் !

    இனி பிணத்திற்கு சமம் !

    என் இனிய தமிழ் மக்களே.
    தமிழ் இனம் நொந்து, விழுந்து எழ முயலுமா நேரம்!

    இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ருசியா போன்ற பெரிய காட்டெருமை நாடுகள் ஒரு புறம்!
    ஈழத்து புலிகள் மறுபுறம்!
    நாடு அடையும் கனவுகளை கண்ணிலும் நெஞ்சிலும் சுமந்து கொண்டிருந்த எளிய தமிழினத்தின் மீது ஆதிக்க வெரியர்கள் அழிம்புகள் பல செய்துவிட்டார்கள்!
    'நடந்தது நடந்து விட்டது'
    என்று இதை விட்டுவிட இயலாது! நடந்தவற்றில் பாடம் கற்றுக் கொண்டு, எழுந்து இலக்கு நோக்கி நகர்வது தான் ஒரே வழி.

    குருதி வெள்ளத்தில் குஞ்சுகளும் "அம்மா, அம்மா" என்று கத்திக் கதறி உயிர் விட்டபோது, உலகின் எந்த நாடுகளும் இரங்கவில்லை!
    ஏன் என்றும் கேட்கவில்லை!

    சர்வதேச புரட்சி, ஏகாபத்ய புரட்சி, பொதுவுடமை புரட்சி என்று பேசியவர்களெல்லாம் எதையோ புடுங்க போய்விட்டனர்!

    கியூபாவும் எருமைகளோடு எருமையாகத்தான் நின்றது.
    அது நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியது.

    ஐக்கிய நாட்டு அவை ஒரு கொத்தடிமை அவை என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்தது.

    அடுத்து இந்த காந்தி தேசம்! ஐயகோ தமிழினத்தை முற்றாக அழிக்க ஏன் இந்த நாடு இப்படி வெறியோடு முனைந்து நிற்கிறது?

    சோனியாவின் கொத்தடிமைகள் தமிழ்நாட்டு மண்ணில் நின்று இண்ணும் அரசியல் விழையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆழ்கடல் அதிர்வுகளை அறியாத அம்மண சிறார்கள் இந்த காங்கிரசார்!

    ஆழிப்பேரலை ஒன்று இந்த கிழிந்தவாயர்களை கிழித்து தொங்கவிடப் போகிறது என்பதை அறியாது அலைமீது ஆட்டம் போடீகிறார்கள்!

    "ஈழமும் தமிழ்நாடும்" இந்தியாவின் அடிமடா அணுகுண்டு என்பது வடுக பிராமணியத்தின் பிடிவாத கணக்கு! அப்பார்வையை அவர்கள் மாற்றப்போவதே இல்லை!

    வெறி நாய்க்கு முன்பாக வெற்றுக் கையோடு போனால் கொத்தோடு கொண்டு போய்விடும்!

    நாய்வாலை நிமிர்த்த முடியாது!
    இதில் வெறி நாயை திருத்துவது எப்போது.

    அடுத்து திராவிடம்!
    செயலலிதாவும், கருணாநிதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்!
    இந்த நடிக பிறவிகளும்!

    அம்மையாரோ ஈழத்திற்காக தேர்தல் மேடைகளில் சொரிந்த கண்ணீரை கொண்டு முதலைகளே தற்கொலை செய்து கொள்ளும்!

    கருணாநிதி செய்தவற்றை பார்க்கும் போது டக்ளசு தேவானந்தாவும், கருணாவும் கொஞ்சம் மேல்தானே என்று எண்ணத் தோன்றும்.

    அப்படிப்பட்ட நச்சில் தோய்த்த எதிர்பார்ப்பும் இரண்டகமும் அவரது சொல்லிலும் செயலிலும் கொட்டுகிறது.

    இம்மண்ணில் திராவிடம் கருக் கொள்ளாதிருந்தால் யூதன் தமிழனுக்கு அடுத்த படியில்தான் இன்று நின்றிருப்பான்.

    ஆனால். பத்தரை கோடி தமிழர்களையும் மாய வலைக்குல் நம்பி கெடவைத்த கருத்தியல் திராவிடமே!
    இது ஈழத் தமிழர் பலருக்கும் இங்குள்ள தமிழர் சிலருக்கும் புரியவில்லை!
    இரண்டுமே இருபெரும் அடிமை நாடுகள்!

    மண்ணுரிமையும் வாழ்வுரிமையும் இழந்து நிற்கிற நாடுகள்! விடுதலை தாகத்தை நெஞ்சில் சுமந்து நிற்கும் நாடுகள்!

    ஆணால்

    சிறு படையான் செல்லிடம் சேரின் உருபடையான்
    ஊக்கம் அழிந்து விடும்.

    என்பது வள்ளுவன் வாக்கு, ஓர்மையுள்ள நாம் சிறு எண்ணிக்கையில் தானே இருக்கின்றோம் என்று எண்ணித் தயங்காதே!

    இலக்கு தவிர்க்காத ஆமை முயலை வென்றது,
    கதையல்ல
    அதுதான் பாடம்.

    சிறு எண்ணிக்கை என்றாலும் இலக்கு வரை சீறிப்பாய்ந்தது அன்று அலைக்சான்டர் படைகள்.

    நாம் சிறு எண்ணிக்கையில் இருந்தாலும்!
    சீரிய போக்கும் நோக்கமும் இருந்தால் போதும்,

    போர் வெறி வேண்டாம்!
    போர் உத்தி வேண்டும்.

    இனவெறி வேண்டாம்!
    அது திராவிடனின் சொத்து.

    இனபற்று வேண்டும்,
    உழைப்பு வேண்டும்,
    ஒத்துழைப்பு வேண்டும்.

    " தன்னைவிட தாய் நாட்டையும், தாய் மொழியையும் நேசிக்கின்ற உயரிய பண்பு வேண்டும்"

    முள்ளிவாய்க்கால் ,
    முற்றுப் புள்ளியு மல்ல!

    முடிந்த கதையுமல்ல!

    விழுந்த இடம் வீழ்ந்த இடம் அல்ல,

    விழி,

    எழு,

    நிமிர்,

    நட.

    இப்படிக்கு,
    அரிமாவளவன்.
    தமிழர் களம்.

    அண்ணண் வழியில் என்றும் ரோமியோ பெனட்.

விதைக்கப்பட்ட வைரங்களை கண்டிருக்கிறீர்களா !


  • விதைக்கப்பட்ட வைரங்களை கண்டிருக்கிறீர்களா !

    எங்கேயென்று தெரியுமா ?

    அவைகள் தான் ..
    ...
    நம் வான்வெளியிலே தூவப்பட்ட மின்னும் வைரங்கள்.....

    இவையோ சொல்ல முடியா அழகானவை !

    விதைக்கப்பட்ட இவைகளோ மாசற்றவை !


    நம் விந்தைக்கும் அப்பாற்பட்டவன் இவற்றை விதைத்தவன்.

    எவன் அவன்


    அவன்தான் நம் இறைவன்.

    நம்மையும் படைத்த இறைவனையும் நினைப்போம் !

    இறை பக்தியில் நிலைப்போம் !

    தமிழில் பெறுமை காண்போம்...

    தமிழனாய்!

    இணைந்திருப்போம் நல்தமிழனாய் !

    காற்றோடு கரைந்துள்ளோம் !
    எங்கும் !
    என்றும் !

    நம் அழகிய நினைவுகளுடன்.

    இவண் ரோமியோ தமிழன்.
    தமிழர்களம்.
    See More