இரவல் கவிதைகள் - வாரமலர்
பிப்ரவரி - 14
காலையில்
நிர்வாணம் பூண்ட
நீலவானம்
மின்சாரம் இல்லாததால்
அடிபம்புத் தண்ணீரில்
குளியல்
பரவசம் படிந்த
பறவையின் மொழி
எப்போதும் போல
இன்றும்
எதிர்வீட்டுக் குழந்தையின்
கையசைப்பு...
இவையன்றி
வேறென்ன சிறப்பு
இருக்கமுடியும்
இந்நாளில்?
இனியவளே
நீ காதல்
வயப்படாதவரை...
--நாவிஷ் செந்தில்குமார்
Saturday, February 7, 2009
Saturday, January 31, 2009
Tuesday, January 27, 2009
Saturday, January 17, 2009
Thursday, January 15, 2009



No comments:
Post a Comment