Sunday, July 18, 2010

திருநெல்வேலி மாவட்டம்


திருநெல்வேலி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திருநெல்வேலி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் திருநெல்வேலி ஆகும்.

"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். 1790 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி(1 September 1790)[1][2] திருநெல்வேலி மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியால்(இங்கிலாந்து அரசாங்கம்) உருவாக்கப்பட்டது.(அன்றைய தினத்தில் திருநெல்வேலி மாவட்டத்துடன் இன்றைய தூத்துக்குடி மாவட்டமும், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இருந்தன.) செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி தினமாக கொண்டாடப்படுகிறது.

பொருளடக்கம்

[மறை]

வருவாய் கோட்டங்கள்

  1. திருநெல்வேலி
  2. தென்காசி
  3. சேரன்மகாதேவி

வட்டங்கள்

  1. திருநெல்வேலி
  2. பாளையங்கோட்டை
  3. சங்கரன்கோவில்
  4. அம்பாசமுத்திரம்
  5. தென்காசி
  6. சிவகிரி
  7. செங்கோட்டை
  8. நாங்குநேரி
  9. இராதாபுரம்
  10. ஆலங்குளம்
  11. வீரகேளம்புதூர்

நகராட்சிகள்

  1. சங்கரன்கோவில்
  2. தென்காசி
  3. கடையநல்லூர்
  1. செங்கோட்டை
  2. புளியங்குடி
  1. அம்பாசமுத்திரம்
  2. விக்கிரமசிங்கபுரம்

இந்து சமயக் கோயில்கள்

தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.

காந்திமதி நெல்லையப்பர் கோவில்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான் [3].இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

சபை சிவாலயங்கள்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • சித்ர சபை - திருக்குற்றாலம்
  • தாமிர சபை- திருநெல்வேலி

முப்பீட தலங்கள்

பஞ்ச ஆசன தலங்கள்

  • ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்
  • களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்
  • நான்குநேரி - திருநாகேஷ்வரர் திருக்கோயில்
  • விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்
  • செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்
  • தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்
  • சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)
  • கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்
  • தாருகாபுரம் - நீர் தலம்
  • தென்மலை- காற்று தலம்
  • தேவதானம் - ஆகாய தலம்

காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்

  • சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்
  • ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்
  • கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்
  • திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்
  • பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்

இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்

  • களக்காடு- சத்யவாகீசர்
  • பத்தை - குலசேகரநாதம்
  • பத்மனேரி - நெல்லையப்பர்
  • தேவநல்லூர் - சோமநாதம்
  • சிங்கிகுளம் - கைலாசநாதம்

நவ சமுத்திர தலங்கள்

  • அம்பாசமுத்திரம்
  • ரவணசமுத்திரம்
  • வீராசமுத்திரம்
  • அரங்கசமுத்திரம்
  • தளபதிசமுத்திரம்
  • வாலசமுத்திரம்
  • கோபாலசமுத்திரம்
  • வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
  • ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

பஞ்ச பீட தலங்கள்

பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.

  • கூர்ம பீடம் - பிரம்மதேசம்
  • சக்ர பீடம் - குற்றாலம்
  • பத்ம பீடம் - தென்காசி
  • காந்தி பீடம் - திருநெல்வேலி
  • குமரி பீடம் - கன்னியாகுமரி.இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்)

  • பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில்
  • அரியநாயகிபுரம் - கைலாசநாதர் திருக்கோயில்
  • திருநெல்வேலி (தென்கைலாயம்)- தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில்
  • கீழநத்தம் (மேலூர்)- கைலாசநாதர் திருக்கோயில்
  • முறப்பநாடு - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்
  • தச வீரட்டானத் தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்)
  • சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த தலம்
  • வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம்
  • கோடகநல்லூர் - அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் - பிராண லிங்கத் தலம்
  • சிங்கிகுளம் - கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத் தலம்
  • மேலநத்தம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சரண தலம்
  • ராஜவல்லிபுரம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சகாய தலம்
  • தென்மலை - திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோயில் - பிரசாதி தலம்
  • அங்கமங்கலம் - நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோயில் - கிரியாலிங்க தலம்
  • காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் - சம்பத் தலம் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • திற்பரப்பு - மகாதேவர் திருக்கோயில் (இது தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது)

வாலி வழிபட்டத் தலங்கள்

  • திருவாலீஸ்வரம் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
  • கீழப்பாவூர் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
  • தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
  • நவகைலாயங்களும் நவக்கிரகங்களின் ஆட்சியும்
  • பாபநாசம் - சூரியன்
  • சேரன்மகாதேவி - சந்திரன்
  • கோடகநல்லூர் - செவ்வாய்
  • குன்னத்தூர் - இராகு
  • முறப்பநாடு - குரு(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • தென்திருப்பேரை - புதன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • ராஜபதி - கேது(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
  • சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

வேறு சில ஆலயங்கள்

  • இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங்க தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.
  • நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.
  • நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் இந்நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது.
  • சங்கரன் கோயில் எனும் ஊரில் உள்ள சங்கரநாராயணர் கோவில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.

சுற்றுலாத் தலங்கள்

பாபநாசம்

தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் வியாசரையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார். இங்கு அகஸ்தியர் அருவி என்கிற நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது.

குற்றாலம்

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் குற்றாலம் நகரும் ஒன்று. குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. இங்கு குளித்து மகிழ மெயின் அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என்று பல நீர்விழ்ச்சிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது என்று 1811 ஆம் ஆண்டில் ஆங்கில ஆட்சியாளர்களான கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அனுப்பிய மருத்துவ குழுவினர் தங்களது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர். தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளது என்கிறார்கள்.

இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அருவிகளில் நீர் விழத் தொடங்கும். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும்.

குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானது தேனருவி, இங்கு தேன்கூடுகள் பல உள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. இங்கிருந்து இரண்டரை கி.மீ கீழே செண்பகா தேவி அருவி உள்ளது. இங்கு செண்பகா தேவியம்மன் ஆலயம் இருக்கிறது.

தமிழகத்தில் நடராஜர் நடனமாடிய 5 சபைகளில் திருகுற்றாலநாதர் ஆலயம் சித்திர சபை என்று அழைக்கப்படுகிறது. இங்கு குறுமுனி என்றழைக்கப்பட்ட தமிழ் மாமுனிவர் அகத்தியர் வழிபட்ட சிவபெருமான் சன்னதி உள்ளது.

சிறப்புக்கள்

அல்வா

திருநெல்வேலி, அல்வா எனப்படும் இனிப்புப் பண்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் நீரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

பத்தமடை பாய்

திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் வழியில் உள்ள ஊர் பத்தமடை. இந்த பத்தமடை பாய் நெய்வதற்கு உலக அளவில் பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள மக்கள் நெய்யும் பாய்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஹென்றி பவர் கல்லறை

ஹென்றி பவர் கல்லறை

சீகன் பால்க் மொழிபெயர்ப்பு வழக்கொழிந்து மறக்கப்பட்டுப் போனதாலும், பப்ரிசியுசின் மொழி பெயர்ப்பிலும், இரேனியுஸ் மொழி பெயர்ப்பிலும் குறைபாடுகள் இருந்த காரணத்தாலும், சென்னை வேதாகமச் சங்கம், எல்லா புரோட்டஸ்தாந்து சபைகளும் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு புதிய தமிழ் மொழி பெயர்ப்பை உருவாக்கும் எண்ணத்தில், ஹென்றி பவர் ஐயரைத் தலைமை மொழி பெயர்ப்பாளராகவும், அவருக்கு உதவியாக மற்ற சபைகளைச் சேர்ந்த ஏழு பேரைக் கொண்ட ஒரு குழுவையும் நியமித்தது. இந்தக் குழுவில், டாக்டர் கால்டுவெல், சார்ஜென்ட் ஐயர், திரேசி ஐயர், திரு. முத்தையா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த மொழிபெயர்ப்புதான், இரண்டு முறை திருத்தப்பட்டுள்ளது. இன்று தமிழ் பேசும் கிறித்தவர்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் வேதாகமம் ஆகும். இவரின் மொழிபெயர்ப்பு, பவர் மொழிபெயர்ப்பு, அல்லது ஐக்கிய மொழிபெயர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த குழுவின் தலைவர் ஹென்றி பவர் ஐயரின் கல்லறை திருநெல்வேலி, பாளையங்கோட்டை மிலிட்டரி லைன், கிறிஸ்து ஆலயக் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்

  1. http://www.edreamsinetcafe.in/tirunelveli/history.htm
  2. http://www.dictirunelveli.in/profile.html
  3. http://www.muthukamalam.com/muthukamalam_anmeegam66.htm

No comments:

Post a Comment