Saturday, June 16, 2012

தமிழர் களம்


  • உயிருள்ள தமிழனெல்லாம் இதை படியுங்கள்

    சினம் கொள்ளாத இனம் !

    இனி பிணத்திற்கு சமம் !

    என் இனிய தமிழ் மக்களே.
    தமிழ் இனம் நொந்து, விழுந்து எழ முயலுமா நேரம்!

    இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ருசியா போன்ற பெரிய காட்டெருமை நாடுகள் ஒரு புறம்!
    ஈழத்து புலிகள் மறுபுறம்!
    நாடு அடையும் கனவுகளை கண்ணிலும் நெஞ்சிலும் சுமந்து கொண்டிருந்த எளிய தமிழினத்தின் மீது ஆதிக்க வெரியர்கள் அழிம்புகள் பல செய்துவிட்டார்கள்!
    'நடந்தது நடந்து விட்டது'
    என்று இதை விட்டுவிட இயலாது! நடந்தவற்றில் பாடம் கற்றுக் கொண்டு, எழுந்து இலக்கு நோக்கி நகர்வது தான் ஒரே வழி.

    குருதி வெள்ளத்தில் குஞ்சுகளும் "அம்மா, அம்மா" என்று கத்திக் கதறி உயிர் விட்டபோது, உலகின் எந்த நாடுகளும் இரங்கவில்லை!
    ஏன் என்றும் கேட்கவில்லை!

    சர்வதேச புரட்சி, ஏகாபத்ய புரட்சி, பொதுவுடமை புரட்சி என்று பேசியவர்களெல்லாம் எதையோ புடுங்க போய்விட்டனர்!

    கியூபாவும் எருமைகளோடு எருமையாகத்தான் நின்றது.
    அது நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியது.

    ஐக்கிய நாட்டு அவை ஒரு கொத்தடிமை அவை என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்தது.

    அடுத்து இந்த காந்தி தேசம்! ஐயகோ தமிழினத்தை முற்றாக அழிக்க ஏன் இந்த நாடு இப்படி வெறியோடு முனைந்து நிற்கிறது?

    சோனியாவின் கொத்தடிமைகள் தமிழ்நாட்டு மண்ணில் நின்று இண்ணும் அரசியல் விழையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆழ்கடல் அதிர்வுகளை அறியாத அம்மண சிறார்கள் இந்த காங்கிரசார்!

    ஆழிப்பேரலை ஒன்று இந்த கிழிந்தவாயர்களை கிழித்து தொங்கவிடப் போகிறது என்பதை அறியாது அலைமீது ஆட்டம் போடீகிறார்கள்!

    "ஈழமும் தமிழ்நாடும்" இந்தியாவின் அடிமடா அணுகுண்டு என்பது வடுக பிராமணியத்தின் பிடிவாத கணக்கு! அப்பார்வையை அவர்கள் மாற்றப்போவதே இல்லை!

    வெறி நாய்க்கு முன்பாக வெற்றுக் கையோடு போனால் கொத்தோடு கொண்டு போய்விடும்!

    நாய்வாலை நிமிர்த்த முடியாது!
    இதில் வெறி நாயை திருத்துவது எப்போது.

    அடுத்து திராவிடம்!
    செயலலிதாவும், கருணாநிதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்!
    இந்த நடிக பிறவிகளும்!

    அம்மையாரோ ஈழத்திற்காக தேர்தல் மேடைகளில் சொரிந்த கண்ணீரை கொண்டு முதலைகளே தற்கொலை செய்து கொள்ளும்!

    கருணாநிதி செய்தவற்றை பார்க்கும் போது டக்ளசு தேவானந்தாவும், கருணாவும் கொஞ்சம் மேல்தானே என்று எண்ணத் தோன்றும்.

    அப்படிப்பட்ட நச்சில் தோய்த்த எதிர்பார்ப்பும் இரண்டகமும் அவரது சொல்லிலும் செயலிலும் கொட்டுகிறது.

    இம்மண்ணில் திராவிடம் கருக் கொள்ளாதிருந்தால் யூதன் தமிழனுக்கு அடுத்த படியில்தான் இன்று நின்றிருப்பான்.

    ஆனால். பத்தரை கோடி தமிழர்களையும் மாய வலைக்குல் நம்பி கெடவைத்த கருத்தியல் திராவிடமே!
    இது ஈழத் தமிழர் பலருக்கும் இங்குள்ள தமிழர் சிலருக்கும் புரியவில்லை!
    இரண்டுமே இருபெரும் அடிமை நாடுகள்!

    மண்ணுரிமையும் வாழ்வுரிமையும் இழந்து நிற்கிற நாடுகள்! விடுதலை தாகத்தை நெஞ்சில் சுமந்து நிற்கும் நாடுகள்!

    ஆணால்

    சிறு படையான் செல்லிடம் சேரின் உருபடையான்
    ஊக்கம் அழிந்து விடும்.

    என்பது வள்ளுவன் வாக்கு, ஓர்மையுள்ள நாம் சிறு எண்ணிக்கையில் தானே இருக்கின்றோம் என்று எண்ணித் தயங்காதே!

    இலக்கு தவிர்க்காத ஆமை முயலை வென்றது,
    கதையல்ல
    அதுதான் பாடம்.

    சிறு எண்ணிக்கை என்றாலும் இலக்கு வரை சீறிப்பாய்ந்தது அன்று அலைக்சான்டர் படைகள்.

    நாம் சிறு எண்ணிக்கையில் இருந்தாலும்!
    சீரிய போக்கும் நோக்கமும் இருந்தால் போதும்,

    போர் வெறி வேண்டாம்!
    போர் உத்தி வேண்டும்.

    இனவெறி வேண்டாம்!
    அது திராவிடனின் சொத்து.

    இனபற்று வேண்டும்,
    உழைப்பு வேண்டும்,
    ஒத்துழைப்பு வேண்டும்.

    " தன்னைவிட தாய் நாட்டையும், தாய் மொழியையும் நேசிக்கின்ற உயரிய பண்பு வேண்டும்"

    முள்ளிவாய்க்கால் ,
    முற்றுப் புள்ளியு மல்ல!

    முடிந்த கதையுமல்ல!

    விழுந்த இடம் வீழ்ந்த இடம் அல்ல,

    விழி,

    எழு,

    நிமிர்,

    நட.

    இப்படிக்கு,
    அரிமாவளவன்.
    தமிழர் களம்.

    அண்ணண் வழியில் என்றும் ரோமியோ பெனட்.

No comments:

Post a Comment