Friday, May 17, 2013

உன் தோழனாய் நானடி (கவிதை)


உன் தோழனாய்  நானடி 
நான்
இருந்தாலும் இறந்தாலும்
என்றென்றும்
என் கவிதை உனை பற்றி பேசும் ...

நீ பிரிந்தாலுமே
என்னை மறந்தாலுமே
என்றென்றும்
என் கவிதை உன் பெயரை சொல்லுமே

தொழியே !....

நான் காற்றிலே கரைந்தாலும்
உன் சுவாசம் ஆவேன் ...
தண்ணீராகி போனாலும்
உன் தாகம் தீர்ப்பேன்

நீ நடக்கின்ற பாதையின்
ஒளியாக வருவேன்
உன் இரவுக்கு நிலவாக
என்றென்றும் வருவேன்

சுட்டெறிக்கின்ற வெயிலிலே
நிழலாக வருவேன்
அடைமழையதுவும் பெய்கையில்
குடையாக வருவேன்

என்றென்றும் உன் வாழ்வில்
உனக்காக வருவேன்
உன் தோழனாய் நானடி ...







No comments:

Post a Comment